headerphoto

ஜல்லிக்கட்டு


புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையட்டி 29.03.09 அன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. திருச்சி, புதுக்கோட்டை, மதுரை உட்பட பல மாவட்டங்களை சேர்ந்த 800 காளைகள் பங்கேற்றன. இதில் 170 வீரர்கள் காயமடைந்தனர். அடக்க முயன்ற வீரரை கொம்பால் முட்டி, தூக்கி வீசுகிறது காளை.

மாதவி பொன் மயிலால் தோகை விரித்தாள்


மாதவி பொன் மயிலால் தோகை விரித்தாள்: சீனாவின் ஜியாங்சு மாநிலம் நான்ஜிங் நகரில் திருமண கலாசார ஆடை கண்காட்சி நடந்தது. இதில் ஒரு பெண், மயில் தோகையால் செய்யப்பட்ட ஆடையை அணிந்து வந்து எல்லோரையும் அசத்தினார்.

கால் வளைவு ...


கால் சற்று வளைந்து காணப்படும் குழந்தைகளை இடுப்பளவு மணலில் புதைத்து வைத்தால் வளைவு சரியாகும் என்று பலரும் கருதுகின்றனர். மெரினா கடற்கரையில் ஒரு குழந்தையை அம்மாவும் பாட்டியும் மணலுக்குள் நிறுத்தி வைத்திருக்கின்றனர். படம்: மாதவன்

ஓடி விளையாடு ...


ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வீரர் இவர். குழந்தை குட்டிகளை தாய்நாட்டில் விட்டுவிட்டு எங்கோ வந்து டூட்டி பார்க்கிறோமே என்ற கவலையுடன் இருந்த இவர், ஆப்கன் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்ததும் உற்சாகமானார். அவர்களுடன் சேர்ந்து ஓடிப்பிடித்து விளையாடுகிறார்.

இருளில் முள்கிய ஈபிள் கோபுரம்


புவி வெப்பமாவதை தடுப்பதற்கு மின்சார உபயோகத்தை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக 28.03.09 அன்று இரவு உலகமுழுவதும் அரைமணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டதும் இருளில் மூழ்கியது. (அடுத்தபடம்) மின் இணைப்பு கிடைத்ததும் மீண்டும் ஜொலிக்கிறது ஈபிள் கோபுரம்.

புதிய பராசக்தி - Video

மேஜிக்! மேஜிக்!!


பெரு நாட்டை சேர்ந்த பிரபல மேஜிக் நிபுணர் கிளாடியா பச்சிகோ, லிமாவில் நடத்திய நிகழ்ச்சியில் அந்தரத்தில் அமர்ந்தபடி தியானம் செய்கிறார்.

பெண் !


பஸ் நிறுத்த நிழற்குடையிலோ, சிக்னலுக்காகவோ இரண்டு நிமிடங்கள் காத்திருப்பதற்குள்ளாகவே வெயில் மீது எரிச்சல் வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் செருப்புகூட போடாமல் பார வண்டியை தள்ளிச் செல்லும் பெண். படம்: ஜெகன்

S.P.பாலசுப்பிரமணியம் குரளில் - உலகத் தமிழா எழுந்து வா - வீடியோ

நிம்மதியான தூக்கம் பெண்களை அழகாக்கிறது


அழகே உன் தூக்கமும் அழகு தான்! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தில் உள்ள அழகு எப்படிப்பட்டது என்பதை உணர்த்தக்கூடியது அழகான கண்கள் தான். கறுப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறாயே என்று சில பெண்களை பார்த்துச் சொல்வார்கள். அப்படி, களையாக இருக்கிறாயே என்று பிறரை சொல்ல வைப்பது சாட்சாத் இந்த கண்களே தான்!

ஒரு நாள் தூக்கம் இல்லை என்றால் முகமும் வாடிப்போய் இருக்கும். கண்களும் சோர்ந்து போய் இருக்கும். தூக்கத்தைத் தேடித் துடிக்கும் கண்களின் அந்த நேர போராட்டத்தை ஆராய்ச்சி செய்தால் பல புத்தகங்களே எழுதிவிடலாம் என்பது போல் தோன்றும்.

சிலர் படுக்கையில் படுத்த மாத்திரத்தி லேயே தூங்கிவிடுவார்கள். இன்னும் சில ருக்கு என்ன தான் புரண்டு புரண்டு படுத் தாலும் தூக்கம் மட்டும் உடனே வராது. தூக்கத்தோடு பெரும் போராட்டம் நடத்திக் கொண்டே, அவர்களை அறியாமலேயே தூங்கிவிடுவார்கள்.

உண்மையைச் சொல்லப்போனால் தூக்கம் தான் மனிதனுக்கு இலவசமாக கிடைக்கும் அருமையான மருந்து. பெட்டி நிறைய பணம் இருந்து என்ன பயன்? தூக்கம் வர மாட்டேங்குதே? என்று சிலர் புலம்புவதை நீங்கள் கேட்டிருக்கலாம். இதில் இருந்தே, தூக்கம் ஒருவருக்கு எந்த அளவுக்கு தேவை என்பதை அறிந்து கொள்ளலாம். காதலர்கள் தங்களுக்குள் முதன் முதலில் காதலை பரிமாறிக் கொள்வது இந்த கண்களால் தான். வாய் பேசாத பல வார்த்தைகளை இந்த சின்னக் கண்கள் எளிதில் பேசி விடும். கண்களால் தூது சொல்ல மாட்டாயா? என்று காதலன் காதலியை பார்த்து ஏங்குவதும் இதனால் தான்.

ஒரு மனிதன் தன் பரிபூரணமான வாழ்நாளில் சுமார் 23 ஆண்டுகளை தூக்கத்திலேயே செலவிடுகிறான். உடலும், மூளையும் வளர்வதற்கு, புதுப்பித்துக் கொள்வதற்கு அவகாசம் தருவது இந்த தூக்கம் தான். பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் தூங்குகிறது. 35 வயது வரையிலான குழந்தை 11 மணி நேரம் தூங்குகிறது. போகப்போக தூங்கும் நேரம் குறை கிறது. காரணம், மூளையானது தேவை இல்லாத விஷயங்களையும் இழுத்துப் போட்டு யோசிப்பது தான். சிலர் பணம்… பணம்… என்று அலைந்தே தூக்கத்தை தொலைத்து விடுகிறார்கள்.

நாளடைவில் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்ற சராசரி அளவை எட்டுகிறார்கள். சிலர் உழைப்பின் மீதுள்ள அதீத காதலால் 67 மணி நேரம் தான் தூங்குகிறார்கள். இந்த தூக்கம் கூட வராமல் தவிப்பவர்களும் உண்டு. தூக்கத்தை இரு வகையாக பிரிக்கிறார்கள். ரெம் மற்றும் நொன் ரெம் தான் அவை. இதில், ரெம் வகை தூக்கத்தின்போது வரும் கனவுகள் தான் பளிச்சென்று ஞாபகத்தில் இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

மேலும், ரெம் தூக்கத்தின்போது தான் அதிகம் கனவுகள் தோன்றுகின்றனவாம். அப்போது, விழிப்புடன் இருக்கும் மூளை, தன்னிடம் இருந்து செல்லும் எல்லா தகவல் வழித்தடங் களும் சரியாக இருக்கின்றனவா என்று சரி பார்த்து கொள்கிறதாம். எதிலும் ஆக்டிவ் ஆக உள்ளவர்களுக்கு தான் இந்த ரெம் வகை தூக்கம் அதிக நேரம் நீடிக்குமாம். கனவுகளும் அதிகம் வருமாம். மந்தபுத்தி உள்ளவர் என்றால் இவ்வகை தூக்கம் குறைவு தானாம். அதனால் கனவுகளும் குறைவாகத் தான் வருமாம்.

தூக்கம் என்பது இயற்கையானது. என்ன தான் தூக்கம் வராமல் இழுத்துப் பிடித்துக் கொண்டு இருந்தாலும், ஏதாவது ஒரு கட்டத்தில் கண்டிப்பாக தூக்கம் வந்தே தீரும். ஒரு நாள் அல்லது 2 நாள் தூங்காமல் இருக்க முயற்சிக்கலாம். அதையும் தாண்டினால், தூக்கம் உங்களை அறியாமலேயே தானே வந்து விடும். இது இயற்கையானது. இதை மாற்ற முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தூக்கம் என்பதை எல்லோருக்கும் பொது வாக இருந்தாலும் பெண்கள் தான் அழகாக தூங்குகிறார்கள் என்று புதிதாக ஒரு ஆராய்ச்சி நடத்தி கண்டுபிடித்து இருக்கி றார்கள். மென்மையான அணுகுமுறை தான் இதற்கு காரணம் என்றும் தீர்வு சொல்லி இருக் கிறார்கள் அந்த ஆராய்ச் சியாளர்கள். மென்மையாக நடந்து கொள்ளாமல் கொஞ்சம் அதிகமாக ஆண் தன்மையுடன் நடந்து கொள்ளும் பெண்களுக்கு இந்த அழகான தூக்கம் கிடைப்பது இல்லையாம். ஆண்களிலும் சொப்ட் கேரக்டர் உள்ளவர் கள் தான் அழகாக தூங்குகிறார்கள். எக்குத ப்பாக அலைபாயும் மனம் கொண்டவர்கள், எப்போதும் எதையோ சிந்தித்துக் கொண்டிரு ப்பவர்கள். என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே கண்டபடி உருண்டு புரண்டு தூங்குகிறார்களாம்.

அதனால் அழகான தூக்கம் பெண்களுக்கு மாத்திரமே என்று சர்டிபிகேட் கொடுக்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு. உங்கள் தூக்கம் எப்படி?

கண்ணதாசனின் குட்டிக்கதை ஒன்று


கிளாசிலே விஸ்கி ஊற்றப்பட்டது.

சோடா உடைக்கப்பட்டது.

விஸ்கி சோடாவைப்பார்த்து கேட்டது-

‘என்னிடம்தான் உனக்கு எவ்வளவு கோபம்! ஏன் என்னோடு நீ கலந்து, என் சக்தியை பலவீனப்படுத்துகிறாய்?’
சோடா பதில் சொன்னது-

‘இது இறைவனின் ஆணை. ஒவ்வொரு தனிச்சக்தியும் பலவீனப்படுத்தப்பட வேண்டும் என்பது அவன் கட்டளை. இல்லாமலா ஆடவன் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று ஆண்டவன் விதி வகுத்து வைத்திருக்கிறான்?’

மஹிந்தா ராஜபக்ஷேயிடன் ஈழ சிறுவன் கேட்ட கேள்விகள்!


ராஜபக்ஷே இலங்கையிலுள்ள ஒரு பள்ளியைப் பார்வையிடுகிறார்.

மஹிந்தா: யாராவது என்னிடம் ஏதாவது கேள்விகள் கேட்க விரும்புகிறீர்களா?

சிறுவன் நிரஞ்சன்: என்னிடம் மூன்று கேள்விகள் இருக்கின்றன.

1) ஏன் நாம் தமிழர்களைப் படுகொலை செய்கிறோம்?
2) லசந்த விக்ரமதுங்கவைக் கொன்றது யார்?
3) பிரபாகரன் எங்கே?

மஹிந்தா: உனக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. நாம் இடைவேளைக்குப் பிறகு
சந்திக்கலாம்.

(இடைவேளைக்குப் பிறகு)

மஹிந்தா: எங்கே நிறுத்தினோம்? ஆம். யாராவது என்னிடம் ஏதாவது கேள்விகள்
கேட்க விரும்புகிறீர்களா?

சிறுவன் மைக்கேல்: என்னிடம் நான்கு கேள்விகள் இருக்கின்றன.

1) ஏன் நாம் தமிழர்களைப் படுகொலை செய்கிறோம்?
2) லசந்த விக்ரமதுங்கவைக் கொன்றது யார்?
3) பிரபாகரன் எங்கே?
4) நிரஞ்சன் எங்கே?

This is the situvation of tamils in Srilanka !

-ஈமெயிலில் வந்தது-

பழைய பீப்பா..


இலங்கையின் மாணிக்கக்கல் தொழில்துறையில் ஈடுபாடுள்ள ஓர் அதிகாரி ஜேர்மனி சென்றிருந்தார். மாணிக்கக்கல் கைத்தொழிலில் ஐரோப்பாவுக்கே நுழைவாயிலாக விளங்கும் ஹேன்ஸ் ஜேர்கன்மெக்வேர்த் என்ற பிரதேசத்தில் ஆய்வுச் சுற்றுலா செய்தார்.
அங்கு ஓர் ஆடம்பரமான நவீன நிலையத்தில் முக்கியமான இடத்தில் ஒரு பழைய பீப்பா வைக்கப்பட்டிருந்தது. அந்த நிலையத்துக்கே அது பொருத்தமற்றது போன்று காட்சியளித்தது.
இது ஏன் இங்கு வைக்கப்பட்டிருக்கிறது என்று இவர் வினவியபோது, "அந்தக் காலத்தில் ஆசிய நாடுகளிலிருந்து, ஏன் உங்கள் நாடான இலங்கையிலிருந்தும் கொண்டுவரப்படும் மாணிக்கக்கற்கள் இந்தப் பீப்பாவுக்குள் தான் வைக்கப்பட்டிருந்தன. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து பீப்பாவிலிருந்து மாணிக்கக் கற்களைத் தெரிவு செய்து வாங்கிச் செல்வார்கள். பழைய வரலாற்றினை நினைவூட்டும் சின்னமாகவே இந்தப் பீப்பா வைக்கப்பட்டிருக்கிறது" என்று விளக்கமளிக்கப்பட்டது.
நாமென்றால் பழைய பீப்பாவை ஆடம்பர நிலையத்தில் வைத்திருப்போமா?
பழைமையைப் பேணுவதில் ஜேர்மனியர் பிரசித்தி பெற்றவர்கள்.

எறும்பு போல் சுறுசுறுப்பாய்...?


எறும்புகள் மிகவும் சுறுசுறுப்பானவை எனத்தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அப்படியில்லையென Biologe pro.Jurgen Heinz அடித்துக் கூறுகிறார்.

எறும்புகள் ஐந்து நிமிடங்கள் வேலை செய்தால் 25 நிமிடங்கள் ஓய்வெடுக்கின்றனவாம். அவரது ஆராய்சியின் படி, மனிதர்களை விட எறும்புகள் குறைவாகத்தான் வேலை செய்கின்றனவாம்.

முத்தம் சில்லென்று சில குறிப்புகள்...


* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது

* எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் .

* காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விடயங்களும் இருப்பதால் , அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .

* 66% பேர் முத்தமிடுகையில் முகத்தை மூடிக்கொள்கின்றனர் , மீதி பேர் மட்டுமே கண்களை திறந்த படி தனது பார்ட்னரை பார்த்த படி முத்தமிடுகின்றனர் .

* அமெரிக்க பெண்கள் தனது திருமணத்திற்கு முன் குறைந்தது 80 ஆண்களையாவது முத்தமிடுகின்றனர் என ஒரு ஆய்வு கூறுகிறது .

* உலகில் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் இருபதாயிரத்து நூற்றி அறுபது நிமிடங்கள் அதாவது இரண்டு வாரங்கள் முத்தமிடுவதில் கழிக்கிறான்.

* நம் உதடுகளின் SENSITIVITY நம் விரல்களை விட 200 மடங்கு அதிகமானது .

* இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பார்த்து முடிக்கப்படும் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டு கொளவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது .

* ஒரு முறை முத்தமிடுவதால் , 2-3 கலோரிகள் நம் உடலில் எரிக்கப்படுகிறது , அதுவே பிரெஞ்சு முத்தமாக இருக்கும் பட்சத்தில் 5 கலோரி அளவுக்கு சக்தி எரிக்கப்படுகிறது.

* வேலைக்கு செல்வதற்கு முன் தன் மனைவியை முத்தமிட்டு செல்பவர்கள் , அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக தனது தொழிலை மேற்கொள்கின்றனர்.

* மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டு கொள்பவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்கு செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறது.

* எஸ்கிமோக்கள் மற்றும் மலேசியர்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டு கொள்கின்றனர் .

* முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. , ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது.

* குண்டாயிருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிடுவதால் தனது உடலின் 26 கலோரிகளை குறைக்க இயலும் . இதனால் தொப்பை குறைகிறதாம்.

* முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY என்று பெயர் .

* 5 மில்லியன் பாக்டீரியாக்கள் முத்தமிடுகையில் பரிமாறப்படுகிறது.

* ORBICULARIS ORIS எனபதே முத்த தசை ஆகும்.

* முத்தமிடுகையில் பெரும்பாலும் நாம் வலது புறமாகவே முத்தமிடுகிறோம் , ஏன் எனில் நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கமே கட்டுப்படுத்தப்படுகிறது.

* சினிமாவில் வெளியான முதல் முத்தகாட்சி 1896ல் வெளியான THE KISS திரைப்படத்தில் JOHN.C.RICE எனும் நடிகர் MAY IRWIN எனும் நடிகைக்கு கொடுத்ததேயாகும்.

* கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்ட மிக நீளமான முத்தம் 417 மணிநேரமாம்.

* இரவில் நாம் முத்தமிட நமது மூளையில் சில சிறப்பு நியுரான்கள் இருப்பாதலேயே நம்மால் இருட்டிலும் சரியாக முத்தமிட முடிகிறதாம்.

* முத்தமிடுவதால் எய்ட்ஸ் பரவுவதில்லை

* இங்கிலாந்தில் மட்டுமே ஜீலை 6 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய முத்த தினமாக கொண்டாடப்படடது .

* அத்தினமே பிற்காலத்தில் உலக முத்ததினமாக மாறியது

* முத்தம் குறித்த ஒரு பழமொழி - அணைப்பில்லா முத்தம் மணமில்லா பூ போன்றது.

அசலுக்கான இணைப்பு: http://athisha.blogspot.com/2008/08/blog-post_7616.html